சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்! | சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை | தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | வெளிநாடு சென்றாலும் கையோடு குக்கர் எடுத்துச் செல்லும் ராம்சரண்: மனைவி தகவல் | காதலியின் மகள் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நடிகர் தர்ஷன் | அரபு நாடுகளில் மரண மாஸ் திரைப்படம் வெளியாக தடை | 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரித்விராஜ் - பார்வதி | கண்ணப்பாவுக்காக உ.பி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரபுதேவா, விஷ்ணு மஞ்சு | அல்லு அர்ஜுன் ஸ்டைலை பின்பற்றி ராம் சரண், அகில் | இலங்கையில் சிக்கித் தவிக்கும் 'பராசக்தி' பணியாளர்கள் |
ஓடிடி வந்த பிறகு உலக சினிமாக்கள் நமது வீட்டுக்குள்ளேயே வர ஆரம்பித்துவிட்டன. அதுபோல நமது சினிமாக்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களின் வீட்டுக்குள்ளும் சென்று சேர்கின்றன.
ஹாலிவுட், கொரியன் அதிகமாகப் பார்க்கும் நமது ரசிகர்களைப் போல, இந்தியத் திரைப்படங்களை அதிகமாகப் பார்க்கும் ரசிகர்களும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் வெளிநாடுகளில் ஏற்படுத்திய தாக்கம் இதற்கு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிப்பில் ஜூன் மாதம் வெளிவந்து வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் 100 கோடி வசூலைக் கடந்த படம் 'மகாராஜா'. இப்படம் ஓடிடி தளத்தில் தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
மற்ற இந்திய மொழிகளில் பெற்ற வரவேற்பை விடவும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று. சமூக வலைத்தளங்களில் இந்தப் படத்தைப் பாராட்டி பல வெளிநாட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதில் வெளிநாட்டு ரசிகை ஒருவர் “ஒரு அப்பாவின் அன்பு… யார் வேண்டுமானாலும் அப்பா ஆகலாம். ஆனால், அதற்குத் தகுதியா ஒருவர் மட்டும்தான் இருப்பாங்க,” என்று நெகிழ்ச்சியாக அவர் குறிப்பிட்டுள்ளது பலரையும் லைக் செய்ய வைத்துள்ளது.