ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் | நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஆசை : 'தேவரா' விழாவில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி பேச்சு | நடிகைகள் குறித்து அவதூறு பேசும் காந்தாராஜ், பயில்வான் ரங்கநாதன் மீது நடிவடிக்கை: மாதர் சங்கம் கோரிக்கை | நடன மங்கை, நாயகி, நடுங்க செய்த வில்லி : நடிகை சிஐடி சகுந்தலாவின் வாழ்க்கை பயணம் |
சைரன் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் அவர் நடித்த மிருதன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கப் போகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன், அனிகா, காளி வெங்கட் முக்கிய படங்களில் நடித்திருந்தார்கள். சாம்பிகளை மையமாகக் கொண்ட கதையில் உருவான மிருதன் படத்தின் இரண்டாம் பாகமும் அதேபோன்ற இன்னொரு மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறுகிறார்கள். இதேபோல், கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில் நடித்த ஜெயம் ரவி விரைவில் அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க போகிறார்.