'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சத்யா சாய் கிருஷ்ணன். இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அரசி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திலேயே நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசிய சத்யா சாய், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் என்னை நடிக்க அழைக்கும் போது முஸ்லீம் கேரக்டர். கண்ணனுக்கு ஜோடி.. சீரியல் முழுக்க எனது கதாபாத்திரம் வரும் என்று சொல்லி அழைத்தார்கள். நானும் 3 நாட்கள் நடித்திருப்பேன். அதற்குள் முஸ்லீம் கதாபாத்திரத்தால் ஏதோ பிரச்னை என்று சொல்லி அந்த கதாபாத்திரத்தை நிறுத்திவிட்டார்கள். எனினும், பாகம் 2வில் என்னை ஞாபகம் வைத்து அரசி கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.