மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சத்யா சாய் கிருஷ்ணன். இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அரசி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திலேயே நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசிய சத்யா சாய், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் என்னை நடிக்க அழைக்கும் போது முஸ்லீம் கேரக்டர். கண்ணனுக்கு ஜோடி.. சீரியல் முழுக்க எனது கதாபாத்திரம் வரும் என்று சொல்லி அழைத்தார்கள். நானும் 3 நாட்கள் நடித்திருப்பேன். அதற்குள் முஸ்லீம் கதாபாத்திரத்தால் ஏதோ பிரச்னை என்று சொல்லி அந்த கதாபாத்திரத்தை நிறுத்திவிட்டார்கள். எனினும், பாகம் 2வில் என்னை ஞாபகம் வைத்து அரசி கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.