காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது முதல் படத்தை கடந்த ஆண்டே இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. துருவ் விக்ரம், கவின் உள்ளிட்ட சில நடிகர்களை சந்தித்து கதை சொல்லி அவர் கால்சீட் கேட்டதாகவும் கூறப்பட்டது. என்றாலும் ஓராண்டாக அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில் தற்போது விரைவில் அவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது மட்டுமின்றி ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் நாயகனாகவும், அதிதி ஷங்கர் நாயகியாகவும், விஜய் சேதுபதி மகன் சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுவதோடு, இப்படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைப்பதாகவும் கூறுகிறார்கள். இது குறித்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.