இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா | பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? | ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு |

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது முதல் படத்தை கடந்த ஆண்டே இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. துருவ் விக்ரம், கவின் உள்ளிட்ட சில நடிகர்களை சந்தித்து கதை சொல்லி அவர் கால்சீட் கேட்டதாகவும் கூறப்பட்டது. என்றாலும் ஓராண்டாக அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில் தற்போது விரைவில் அவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது மட்டுமின்றி ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் நாயகனாகவும், அதிதி ஷங்கர் நாயகியாகவும், விஜய் சேதுபதி மகன் சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுவதோடு, இப்படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைப்பதாகவும் கூறுகிறார்கள். இது குறித்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.




