மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கவுதம் மேனன் முதல் முறையாக மலையாளத்தில் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார். நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தில் மம்முட்டி தான் கதாநாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. பொதுவாக ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிகளிலும் படம் இயக்கச் செல்லும் இயக்குனர்கள், தங்களுடன் ஏற்கெனவே இருக்கும் உதவி இயக்குனர்களையும் அழைத்துச் செல்வர். மற்ற மொழிகள் தெரியாத இயக்குனர்கள் அந்த மொழி தெரிந்த உதவி இயக்குனர்கள் சிலரையும் புதிதாக வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.
ஆனால், நடிகர் மம்முட்டி இந்த விஷயத்தில் கவுதம் மேனனுக்கு கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். சென்னையிலிருந்து கவுதம் மேனனின் உதவி இயக்குனர்கள் யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டாராம். மலையாளத் திரையுலகத்திலிருந்து உதவி இயக்குனர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் இங்குள்ள தமிழ் சினிமா இயக்குனர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.