ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தற்போது ஈகை என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் அஞ்சலி. இது அவரது ஐம்பதாவது படமாகும். அதையடுத்து ராம் இயக்கி உள்ள ஏழு கடல் ஏழு மலை, ஷங்கரின் கேம் சேஞ்சர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் . இந்த நிலையில் தெலுங்கில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற ஒரு படத்தில் விலைமாது ரோலில் நடித்திருந்த அஞ்சலி, தற்போது பாஹிஷ்கரனா என்ற தெலுங்கு வெப் தொடரிலும் புஷ்பா என்ற கேரக்டரில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்த தொடர் ஜி5 ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதோடு மூன்று நாளில் 35 மில்லியன் பேர் இதை பார்த்துள்ளார்கள்.
இதை அடுத்து சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார் அஞ்சலி. அதில், ஜி5 ஓடிடி தளத்தில் மூன்று நாளில் 35 மில்லியன் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதேபோல் புஷ்பா என்ற அந்த ரோலில் நடித்தது சவாலானது தான் என்றாலும் எனக்கு அந்த சவால் மிகவும் பிடித்திருந்தது. எங்களது கதைக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் தரும் இதுபோன்ற ஆதரவு தான் என்னை மேலும் மேலும் புதிய கேரக்டர்களில் நடிக்க தூண்டும் வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் அஞ்சலி.