சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
'இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என அடுத்தடுத்து இரண்டு மாறுபட்ட படங்களைக் கொடுத்து சிறந்த இயக்குனர் எனப் பெயரைப் பெற்றவர் சுதா கொங்கரா. மீண்டும் சூர்யாவுடன் இணைந்து 'புறநானூறு' படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பும் வெளியிட்டார்கள். ஆனால், அந்தப் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்தார்கள்.
இருந்தாலும் அந்தப் படத்தை இருவரும் இணைந்து மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்று தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதே கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்று கோலிவுட்டில் பேச்சு பரவியது.
இந்நிலையில் அந்த பேச்சு தற்போது உறுதியாக ஒப்பந்தம் வரை போய்விட்டதாகச் சொல்கிறார்கள். புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று அந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறதாம். கதையைக் கேட்டு பிடித்துப் போன சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை 'மிஸ்' செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாராம். அவரது முயற்சியில் ஒரு புதிய தயாரிப்பாளரைப் பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.