பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

'இறுதிச் சுற்று, சூரரைப் போற்று' என அடுத்தடுத்து இரண்டு மாறுபட்ட படங்களைக் கொடுத்து சிறந்த இயக்குனர் எனப் பெயரைப் பெற்றவர் சுதா கொங்கரா. மீண்டும் சூர்யாவுடன் இணைந்து 'புறநானூறு' படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பும் வெளியிட்டார்கள். ஆனால், அந்தப் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்தார்கள்.
இருந்தாலும் அந்தப் படத்தை இருவரும் இணைந்து மீண்டும் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்று தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதே கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்று கோலிவுட்டில் பேச்சு பரவியது.
இந்நிலையில் அந்த பேச்சு தற்போது உறுதியாக ஒப்பந்தம் வரை போய்விட்டதாகச் சொல்கிறார்கள். புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று அந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறதாம். கதையைக் கேட்டு பிடித்துப் போன சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை 'மிஸ்' செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாராம். அவரது முயற்சியில் ஒரு புதிய தயாரிப்பாளரைப் பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.




