என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
அயலான் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வர உள்ள படம் ‛அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. முகுந்த் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டு மேலாக படப்பிடிப்பு நடந்து வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இந்த படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால் பட பணிகள் முடிய தாமதம் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில் ‛அமரன்' படத்தை தீபாவளி அன்று அக்., 31ல் ரிலீஸ் செய்வதாக படத்தை தயாரித்துள்ள கமலின் ராஜ் கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.