பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரம்பா. 1993ல் பிரபு கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'உழவன்' படத்தில் அறிமுகமானவர். அதற்கடுத்து சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடித்து வந்த 'உள்ளத்தை அள்ளித்தா' படம் அவரே மிகவும் பிரபலமாக்கியது. அந்தப் படத்தில் இடம் பெற்ற 'அழகிய லைலா' பாடல் அதற்குக் காரணம். சமீபத்தில் வெளிவந்த மலையாளப் படமான 'குருவாயூர் அம்பலநடையில்' அந்தப் பாடலைப் பயன்படுத்தி இருப்பார்கள்.
விஜய் ஜோடியாக 'நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா' ஆகிய படங்களில் நடித்தவர் ரம்பா. கனடாவைச் சேர்ந்த ஈழத் தமிழர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள்.
அதன்பின் சில டிவி ஷோக்களில் நடுவர் ஆகப் பணியாற்றினார் ரம்பா. அடிக்கடி சென்னை வந்து செல்வார். தற்போது சென்னை வந்துள்ளவர் தனது கணவர், குழந்தைகளுடன் விஜய்யை சந்தித்துள்ளார்.
“பல வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார்.