இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

தொழில் அதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் பங்குகொண்டவர்கள் தனித்தனியாக சென்று மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சல்மான்கான், அர்பிதா கான் இணைந்து மணக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யாராய் மணமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆனால் சல்மான்கானும், ஐஸ்வர்யாராயும் ஒன்றாக திருமண விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்று சித்தரித்து படம் வெளியானது.
முன்னாள் காதலன் சல்மான்கானுடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா என்பது மாதிரியான செய்திகள் இந்த போலி படத்துடன் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யாராய் இது பற்றி கூறுகையில், ‛‛எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை அதுவும் ஒரு பெண்ணுக்கு தாயான ஒரு பெண்ணைபற்றி இப்படியா பேசுவது.. புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கே அருவருப்பாக உள்ளது,'' என்று கூறியுள்ளார்.