மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி, அதையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. பின்னர் சல்மான்கான் நடிக்கும் படத்தை அவர் இயக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது அட்லி தனது அடுத்த படத்தை தமிழில் இயக்குவதாகவும், அந்த படத்தில் விக்ரம், தனுஷ், பகத் பாசில் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அட்லியின் புதிய படம் குறித்து ஏற்கனவே பல செய்திகள் வெளியான நிலையில், தற்போது இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.




