விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் | 'கர' படத்தில் ரவிக்குமார், சுராஜ், கருணாஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு | ஐந்து மொழிகளில் வரும் டொவினோ படம் | கவர்ச்சிக்கு மாறிய மாளவிகா நாயர் | எனது நடிப்பில் பன்முகத் திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன் : ராஜ்பால் யாதவ் | பல முறை மன்னிப்பு கேட்டார் ரஜினி : அஸ்வத் மாரிமுத்து சொன்ன தகவல் | ரியோ - சானியா அய்யப்பன் இணையும் 'மேடி' | அப்பா சென்டிமென்ட்டில் தமிழ் சினிமா : போன வாரம் 'யூத்', இந்த வாரம் 'ஹாப்பி ராஜ்' | மகளை முத்தமிட்டது தவறா?: பாலிவுட் நடிகர் வேதனை | இயக்குனர் மீது 'கும்பமேளா' புகழ் மோனலிசா பாலியல் புகார் |

பிரபல சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி, வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொண்ட அவர் தற்போது கம்பேக் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் குறித்தும் சமூகத்தில் திருமண உறவில் ஏற்படும் மோசமான மாற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பேட்டியில், 'என்னுடைய கணவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார். என்னுடைய எனர்ஜிக்கு அவர் தான் காரணம். திருமணம் செய்யும்போது ஒருவர் அதிக புரிதலுடனும், மற்றொருவர் குறைவான புரிதலுடனும் இருப்பார்கள். ஆனாலும் அது நன்றாகத்தான் இருக்கும். இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஒருவருடன் பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மாதத்திலேயே பிரிந்து விடுகிறார்கள். இதை தவறில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். இதுதான் தற்போது பரவலாக நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுவதையே கிரிஞ்ச் என்கிறார்கள். இது மிகவும் தவறான விஷயம்' என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.