தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
பிரபல சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி, வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொண்ட அவர் தற்போது கம்பேக் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் குறித்தும் சமூகத்தில் திருமண உறவில் ஏற்படும் மோசமான மாற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பேட்டியில், 'என்னுடைய கணவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார். என்னுடைய எனர்ஜிக்கு அவர் தான் காரணம். திருமணம் செய்யும்போது ஒருவர் அதிக புரிதலுடனும், மற்றொருவர் குறைவான புரிதலுடனும் இருப்பார்கள். ஆனாலும் அது நன்றாகத்தான் இருக்கும். இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஒருவருடன் பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மாதத்திலேயே பிரிந்து விடுகிறார்கள். இதை தவறில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். இதுதான் தற்போது பரவலாக நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுவதையே கிரிஞ்ச் என்கிறார்கள். இது மிகவும் தவறான விஷயம்' என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.