மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி |

சின்னத்திரை பிரபலங்களான அமீத் பார்கவும், ஸ்ரீரஞ்சனியும் சிறந்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு வேதா ஸ்ரீ என்கிற அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சில ஊடகங்களில் அமீத் பார்கவின் மகளுக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அமீத் பார்கவ், 'என் மகளுக்கு ஆட்டிசம், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டோம். அவளுக்கு இருப்பது எக்கோலாலியா. நாம் சொல்கிற சில விஷயங்களை சீக்கிரமாக புரிந்து கொள்ள முடியாது அவ்வளவு தான். மற்றபடி என் மகள் நன்றாக இருக்கிறாள்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து வேதா ஸ்ரீக்கு சீக்கிரம் குணமாகிவிடும் என ரசிகர்கள் கமெண்டுகளில் தங்கள் ஆதரவை அமீத் பார்கவ் - ஸ்ரீரஞ்சனிக்கு கூறி வருகின்றனர்.