மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

பிரபல சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி, வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொண்ட அவர் தற்போது கம்பேக் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் குறித்தும் சமூகத்தில் திருமண உறவில் ஏற்படும் மோசமான மாற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பேட்டியில், 'என்னுடைய கணவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார். என்னுடைய எனர்ஜிக்கு அவர் தான் காரணம். திருமணம் செய்யும்போது ஒருவர் அதிக புரிதலுடனும், மற்றொருவர் குறைவான புரிதலுடனும் இருப்பார்கள். ஆனாலும் அது நன்றாகத்தான் இருக்கும். இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஒருவருடன் பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மாதத்திலேயே பிரிந்து விடுகிறார்கள். இதை தவறில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். இதுதான் தற்போது பரவலாக நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுவதையே கிரிஞ்ச் என்கிறார்கள். இது மிகவும் தவறான விஷயம்' என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.




