பெண் அமைச்சர் மீது 100 கோடி நஷ்ட ஈடு வழக்கு : நாகார்ஜூனா தகவல் | 'இளையராஜா' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் எஸ்ரா | கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் | 'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம் | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் |
பிரபல சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி, வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொண்ட அவர் தற்போது கம்பேக் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் குறித்தும் சமூகத்தில் திருமண உறவில் ஏற்படும் மோசமான மாற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பேட்டியில், 'என்னுடைய கணவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார். என்னுடைய எனர்ஜிக்கு அவர் தான் காரணம். திருமணம் செய்யும்போது ஒருவர் அதிக புரிதலுடனும், மற்றொருவர் குறைவான புரிதலுடனும் இருப்பார்கள். ஆனாலும் அது நன்றாகத்தான் இருக்கும். இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஒருவருடன் பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மாதத்திலேயே பிரிந்து விடுகிறார்கள். இதை தவறில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். இதுதான் தற்போது பரவலாக நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுவதையே கிரிஞ்ச் என்கிறார்கள். இது மிகவும் தவறான விஷயம்' என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.