இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
சினிமா, சின்னத்திரை என அங்கொன்றும் இங்கொன்றுமாய நடித்து வந்த சரண்யா துராடிக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ப்ராஜெக்ட்டும் பெரிதாக கைகொடுக்கவில்லை. வாய்ப்புக்காக தேடி அலைந்த அவருக்கு கடைசியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வரப்பிரசாதமாக அமைந்தது. அவரும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெர்பார்மென்ஸில் கலக்கி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வந்தார்.
இந்நிலையில், விபத்து ஒன்றில் சிக்கிய அவருக்கு காலில் அடிப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சரண்யா, 'சமீபத்தில் காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் மருத்துவமனைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. வலிகளில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். முன்பை விட வலுவாக மீண்டு வருவேன்' என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சரண்யாவுக்கு சீக்கிரமே குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.