மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும்: கமல் கருத்து | மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றும் ரகுமானின் மகள் | பைக் பயணங்களை விடாமல் தொடரும் மஞ்சு வாரியர் | பிறந்தநாள் வாழ்த்துடன் காதலியை அறிமுகப்படுத்திய சுரேஷ்கோபியின் இளைய மகன் | காளிதாஸ் இரண்டாம் பாகம் துவங்குகிறது | சமந்தாவின் கருத்தை விமர்சித்த கிராமி விருது இசையமைப்பாளர் | 'சிறகடிக்க ஆசை' குழுவினருடன் பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயா! | மலராக என்ட்ரி கொடுத்த அஸ்வதிக்கு ரசிகர்கள் வரவேற்பு! | அந்த நாட்களில் கூட கோவிலுக்கு செல்வேன் - வீஜே தீபிகா | நடிகையுடன் தொடர்பு, கொலை மிரட்டல்: தெலுங்கு நடிகர் மீது மனைவி புகார் |
சினிமா, சின்னத்திரை என அங்கொன்றும் இங்கொன்றுமாய நடித்து வந்த சரண்யா துராடிக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ப்ராஜெக்ட்டும் பெரிதாக கைகொடுக்கவில்லை. வாய்ப்புக்காக தேடி அலைந்த அவருக்கு கடைசியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வரப்பிரசாதமாக அமைந்தது. அவரும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெர்பார்மென்ஸில் கலக்கி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வந்தார்.
இந்நிலையில், விபத்து ஒன்றில் சிக்கிய அவருக்கு காலில் அடிப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சரண்யா, 'சமீபத்தில் காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் மருத்துவமனைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. வலிகளில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். முன்பை விட வலுவாக மீண்டு வருவேன்' என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சரண்யாவுக்கு சீக்கிரமே குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.