சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி 7 வருடங்களுக்கு பின் வானத்தைப் போல என்ற தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் இப்போது காண்பிக்கப்படும் வீட்டில் தான் வாணி ராணி தொடரும் படமாக்கப்பட்டது. இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள நீலிமா, 'இதுதான் டிம்பிள் வீடு. நாங்கள் இந்த வீட்டில் சைக்கிள் ஓட்டி விளையாடி இருக்கிறோம். ஒன்றாக சுற்றி திரிந்திருக்கிறோம். இது சூட்டிங் வீடாக இருந்தாலும் இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலுக்கும் என்னுடன் தொடர்புண்டு. தூணில் சாய்ந்திருக்கிறேன். தரையில் அமர்ந்து அழுதிருக்கிறேன். இது போன்ற பல நினைவுகளை எனக்கு இந்த வீடு ரிவைண்டு செய்துள்ளது. இந்த வீட்டை பார்த்ததும் பல ஏக்கமான உணர்வுகள் எனக்குள் வருகிறது' என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.