ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி 7 வருடங்களுக்கு பின் வானத்தைப் போல என்ற தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் இப்போது காண்பிக்கப்படும் வீட்டில் தான் வாணி ராணி தொடரும் படமாக்கப்பட்டது. இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள நீலிமா, 'இதுதான் டிம்பிள் வீடு. நாங்கள் இந்த வீட்டில் சைக்கிள் ஓட்டி விளையாடி இருக்கிறோம். ஒன்றாக சுற்றி திரிந்திருக்கிறோம். இது சூட்டிங் வீடாக இருந்தாலும் இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலுக்கும் என்னுடன் தொடர்புண்டு. தூணில் சாய்ந்திருக்கிறேன். தரையில் அமர்ந்து அழுதிருக்கிறேன். இது போன்ற பல நினைவுகளை எனக்கு இந்த வீடு ரிவைண்டு செய்துள்ளது. இந்த வீட்டை பார்த்ததும் பல ஏக்கமான உணர்வுகள் எனக்குள் வருகிறது' என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.