பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே சில படங்கள் வந்துள்ளன. அந்த வகையில் அதையே சற்று வித்தியாசமான கோணத்தில் காட்டும் விதமாக உருவாகி வரும் படம் ஜமா. பாரி இளவழகன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இந்த படத்தின் கதையை கேட்டதும் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் இளையராஜா.
அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு சினிமா பாடல்களுக்காக பயன்படுத்தும் கருவிகளை பயன்படுத்தி சினிமாத்தனமான பாடல்களையும் இசையையும் கொடுக்க இளையராஜா விரும்பவில்லை. அதற்கு பதிலாக நிஜமான தெருக்கூத்து கலைஞர்களை தனது இசைக்கூடத்திற்கு வரவழைத்து அவர்கள் போக்கிலேயே பாடல்களை பாட விட்டும், அவர்களது இசைக்கருவிகளை இசைக்க விட்டும் அதை எல்லாம் ஒலிப்பதிவு செய்து இந்த படத்தில் அழகாக இசை கோர்ப்பு செய்துள்ளாராம் இளையராஜா.
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகும் படம் இது. குறிப்பாக, நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது.