மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே சில படங்கள் வந்துள்ளன. அந்த வகையில் அதையே சற்று வித்தியாசமான கோணத்தில் காட்டும் விதமாக உருவாகி வரும் படம் ஜமா. பாரி இளவழகன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இந்த படத்தின் கதையை கேட்டதும் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் இளையராஜா.
அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு சினிமா பாடல்களுக்காக பயன்படுத்தும் கருவிகளை பயன்படுத்தி சினிமாத்தனமான பாடல்களையும் இசையையும் கொடுக்க இளையராஜா விரும்பவில்லை. அதற்கு பதிலாக நிஜமான தெருக்கூத்து கலைஞர்களை தனது இசைக்கூடத்திற்கு வரவழைத்து அவர்கள் போக்கிலேயே பாடல்களை பாட விட்டும், அவர்களது இசைக்கருவிகளை இசைக்க விட்டும் அதை எல்லாம் ஒலிப்பதிவு செய்து இந்த படத்தில் அழகாக இசை கோர்ப்பு செய்துள்ளாராம் இளையராஜா.
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகும் படம் இது. குறிப்பாக, நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது.