ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
நடிகை வரலட்சுமிக்கும், மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் அவர்கள் திருமணம் நடைபெறும் நிலையில், அதையடுத்து திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சரத்குமார், ராதிகா, வரலட்சுமி என அனைவரும் பல பிரபலங்களையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று டில்லியில் பிரதமர் மோடியையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி உள்ளார்கள். அப்போது பிரதமருடன் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் சரத்குமார். இவை சோசியல் மீடியாவில் வைரலாகின. அதோடு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோரையும் அவர்கள் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்கள்.