பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

நடிகை வரலட்சுமிக்கும், மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் அவர்கள் திருமணம் நடைபெறும் நிலையில், அதையடுத்து திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சரத்குமார், ராதிகா, வரலட்சுமி என அனைவரும் பல பிரபலங்களையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று டில்லியில் பிரதமர் மோடியையும் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கி உள்ளார்கள். அப்போது பிரதமருடன் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் சரத்குமார். இவை சோசியல் மீடியாவில் வைரலாகின. அதோடு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோரையும் அவர்கள் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்கள்.




