மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
கோலங்கள் என்கிற மாபெரும் ஹிட் தொடரை கொடுத்த திருசெல்வம் சில ஆண்டுகளுக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்தார். கோலங்களை விடவும் எதிர்நீச்சல் தொடரின் கதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்தது. எனவே, அந்த சீரியலுக்கு ப்ரைம் டைம் ஸ்லாட்டி ஒளிபரப்பாக அனுமதி கிடைத்தது. ஆனால், இந்த தொடரில் ஆதி குணசேகரன் என்கிற மிக முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அதை தொடர்ந்து வேல ராமமூர்த்தி அந்த தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்தாலும் சீரியல் பழைய வேகத்தை பெற முடியாமல் டிஆர்பியில் திணறி தற்போது முடிவுக்கே வந்துவிட்டது.
இந்நிலையில், இந்த தொடரில் பட்டம்மாள் என்கிற முக்கிய கேரக்டரில் நடித்த பாம்பே ஞானம் அண்மையில் அளித்த பேட்டியில், 'எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியில் தொடர்ந்து சொதப்பியதால் தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தை வேறொரு டைம் ஸ்லாட்டிற்கு மாற்ற சொல்லி மெயில் அனுப்பினார்கள். அதனால் தான் இயக்குநர் சீரியலை ஒரேடியாக முடித்துவிட்டார்' என்று கூறியுள்ளார்.