ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

சினிமா நடிகர்கள் எங்காவது வெளியில் சென்றால் அவர்களுக்கு 'பில்டப்' கொடுப்பதற்காக பாதுகாப்பு என்ற பெயரில் பவுன்சர்களை வைத்துக் கொள்வார்கள். ரசிகர்கள் யாரும் அவர்களை நெருங்குவதைத் தடுப்பதுதான் பவுன்சர்களின் வேலை. சினிமா விழாக்களில் இதை அதிகம் பார்க்கலாம். பவுன்சர்கள் வைத்தால்தான் விழாவுக்கே வருவேன் என்று சொல்லும் நடிகர்களும் இங்கு இருக்கிறார்கள்.
ஐதராபாத் விமான நிலையத்தில் நடிகர்கள் நாகார்ஜூனா, தனுஷ் நேற்று சென்று கொண்டிருந்தனர். அப்போது வயதான ரசிகர் ஒருவர் நாகார்ஜூனாவை நெருங்கிச் சென்றார். அவரை இழுத்து கீழே தள்ளினார் பவுன்சர் ஒருவர். பின்னால் வந்து கொண்டிருந்த தனுஷூம் அவரது செயலைப் பார்த்து அமைதியாக நடந்து போனார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, ரசிகர்களின் கண்டனத்தைப் பெற்றது. மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்வதா என பலரும் கமெண்ட் செய்தனர்.
இந்நிலையில் அந்த வீடியோவைப் பகிர்ந்து, “இப்போதுதான் எனது கவனத்திற்கு வந்தது. இப்படி நடந்திருக்கக் கூடாது. அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள முன்ஜாக்கிரதையாக இருக்கிறேன்,” என நாகார்ஜூனா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், பின்னால் அமைதியாகக் கடந்து போன தனுஷ் இது குறித்து எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை.




