Advertisement

சிறப்புச்செய்திகள்

சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரும், கவியரசரும் : ஒரே நாளில் பிறந்தார்கள், ஒன்றாக சாதித்தார்கள்

24 ஜூன், 2024 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Flashback:-King-of-Melody,-King-of-Poetry:-Born-on-the-same-day,-achieved-together

தமிழ் சினிமாவை வரிகளால் கண்ணதாசனும், இசையால் எம்.எஸ்.விஸ்வநாதனும் அரை நூற்றாண்டு காலம் ஆண்டார்கள். ஆனால் காலம் காட்டிய அதிசயம் என்ன தெரியுமா? இருவருமே ஒரே நாளில் (ஜூன் 24) ஒரு வருட இடைவெளியில் பிறந்தார்கள்.

கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சாதாரணமான கிராமம்தான் இலப்பள்ளி. அந்த கிராமத்தில் வாழ்ந்த 'மனையங்கத்' பரம்பரையில் வந்த சுப்ரமணியனுக்கும், அவரது மனைவி நாணிக்குட்டி என்று அழைக்கப்பட்ட நாராயணி குட்டி அம்மாளுக்கும் 1928ம் வருடம் ஜூன் 24ம் தேதி பிறந்தார் விஸ்வநாதன். குடும்பப் பெயர், அப்பா பெயர் இரண்டையும் இணைந்த மனையங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் தான் மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன். இசை குடும்பத்தில் பிறக்காமல் சுயமாக இசை கற்று அந்த இசையையும், கேட்ட மக்களையும் பின்னாளில் ஆட்சி செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள் 6 சகோதரிகள், 3 சகோதரர்கள். செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு 7 ஆயிரம் ரூபாய்க்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். பத்திரிகைகளில் எழுதத் தொடங்கிய காலத்தில் வைத்துக் கொண்ட புனைப்பெயர் கண்ணதாசன்.

இசை பின்புலம் இல்லாத எம்.எஸ்.விஸ்வநான் இசையிலும், 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் எழுத்து துறையிலும் சாதித்தது வெறும் சாதனை அல்ல... பெரும் வரலாறு. இன்று அவர்களது பிறந்த நாளில் அவர்களை நினைவு கூறும்வோம், பிரார்த்திப்போம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பவுன்சர்கள் நடத்தை : தனுஷ், நாகார்ஜூனாவுக்கு ரசிகர்கள் கண்டனம்பவுன்சர்கள் நடத்தை : தனுஷ், ... லைவ் மியூசிக்கில் உருவாகி உள்ள 'லக்கி பாஸ்கர்' பாடல் லைவ் மியூசிக்கில் உருவாகி உள்ள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in