சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 230 கோடி வசூலித்து இதுவரை மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையும் பெற்றது. இத்தனைக்கும் சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படத்தில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லாமலேயே அறிமுக இயக்குனர் சிதம்பரத்தின் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. அதே சமயம் இந்த படத்தின் தயாரிப்பு சமயத்தில் சிராஜ் வளையதாரா என்பவர், தயாரிப்பு செலவுக்காக தான் ஒன்பது கோடி பணம் கொடுத்து உதவியதாகவும் படம் வெளியானபின் லாபத்தில் 40 சதவீதம் தனக்கு கொடுப்பதாக கூறிய தயாரிப்பாளர்கள் அதை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்றும் புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றம் மஞ்சும்மேல் வாய்ஸ் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டது. இதுகுறித்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த பண மோசடி குறித்து அமலாக்க துறையும் தானாகவே முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.
சமீபகாலமாக மலையாள திரை உலகில் கருப்பு பணம் உள்ளே நுழைந்துள்ளது என கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்துள்ள அமலாக்கத்துறைக்கு மேலும் பல படங்களுக்கு இதுபோன்று கருப்பு பணம் செலவிடப்பட்டுள்ளது என்கிற தகவலும் கிடைத்துள்ளதாம். இதனை தொடர்ந்து கடந்த ஐந்து வருடங்களில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் வரவு செலவுகளை தோண்டும் வேலையில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.