பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

இயக்குனர் செல்வராகவன் சோசியல் மீடியாவில் அவ்வப்போது சில கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், நாம் செய்கிற வேலை எதுவாக இருந்தாலும் அதில் கர்வமாக செய்ய வேண்டும். வேலை செய்யும் போது கடிகாரத்தை பார்க்க கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் போது வேலை ரொம்ப கடினமாக இருக்கிறது. வறுத்து எடுக்கிறார்கள் என்று அந்த வேலையை பற்றி புகார் சொல்வதை நிறுத்த வேண்டும். வல்லரசு நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். வல்லரசு நாடுகளில் எந்த வேலையாக இருந்தாலும் அதை கர்வத்துடன் செய்வார்கள். கர்வத்தை மண்டையில் ஏற்றிக்கொள்ள மாட்டார்கள். ஆட்டோ டிரைவர், டாக்ஸி டிரைவர் என்றால் கூட அந்த வேலையை கர்வமாக செய்ய வேண்டும்.
செய்கிற வேலையில் வெறுப்பை காட்டாமல் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். குறிப்பாக வேலை செய்யும்போது அது எப்போது முடியும் என்று கடிகாரத்தை பார்க்காமல் முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், மலை ஏறும் போது அதன் உச்சியை பார்க்க கூடாது. அப்படி பார்த்தால் ஏறும் எண்ணமே போய்விடும். பொறுமையாக ஒவ்வொரு படியாக ஏறிச் செல்ல வேண்டும். இப்படித்தான் நாம் செய்யும் வேலைகளிலும் செயல்பட வேண்டும் என்று அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.