சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
25 வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை ஊர்வசி. அதன் பிறகு காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய ஊர்வசி மூக்குத்தி அம்மன், சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்கி வருகிறார். அப்படி அவர் மலையாளத்தில் நடிகை பார்வதியுடன் இணைந்து நடித்துள்ள ‛உள்ளொழுக்கு' என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் படம் முழுக்க சீரியஸான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஊர்வசி. சொல்லப்போனால் நடிப்பில் பார்வதியையே ஊர்வசி ஓவர் டேக் செய்து விட்டார் என்று படம் பார்த்த பலரும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரது காமெடி திறமை பற்றி பேச்சு வந்தபோது, “என்னுடைய நகைச்சுவை காட்சியில் யார் மனதையும் புண்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். குறிப்பாக உருவ கேலி என்பதை நான் தீவிரமாக எதிர்க்கிறேன். பெரும்பாலும் பல படங்களில் கதாநாயகர்களுடன் கூடவே சுற்றிக்கொண்டு வரும் நபர்கள் இதுபோன்ற காமெடியை தான் பின்பற்றி வருகிறார்கள். நான் ஜட்ஜ் ஆக பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கூட, பங்கேற்கும் போட்டியாளர்கள் உருவ கேலி செய்து காமெடி செய்தால் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களுக்கு ஜீரோ மார்க் தான் வழங்குவேன். அதை ஊக்குவித்தால் தவறான முன்னுதாரணமாக போய்விடும்” என்று கூறியுள்ளார்.