என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தேசிய விருது பெற்ற கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, தற்போது 'காந்தாரா சேப்டர்-1' என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ள இப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது ரிஷப் ஷெட்டி தனது தாய் மொழியாக கன்னடத்தில் உரையாற்றி இருக்கிறார். இது இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது கன்னட உரை குறித்து தெலுங்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 'நீங்கள் உங்கள் படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்தும்போது தெலுங்கில் பேச முயற்சி செய்யுங்கள்' என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். என்றாலும் இதுவரை இதற்கு அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதேசமயம் இந்த நிகழ்ச்சியின்போது தனது நண்பரான ஜூனியர் என்டிஆர் குறித்து வெகுவாக பாராட்டி பேசி உள்ளார் ரிஷப் ஷெட்டி.