ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் அடுத்து தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் அவரது மகளாக நடிக்கப் போகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கமாக வைத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது, தென்னிந்திய பாஷையில் ஏதாவது சொல்லுங்களேன் என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டதை அடுத்து, இப்படி தென்னிந்தியர், வட இந்தியர் என்று கேட்பதே ஒருவிதமான இனவாதம்தான். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதோடு வட இந்தியாவில் உள்ளவர்கள் தென்னிந்தியர்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் என கிண்டலடிப்பது சரியல்ல. காமெடிக்காக கூட அப்படி சொல்லாதீர்கள். அப்படி சொன்னால் மூடிட்டு போடா என்று நான் தென்னிந்திய பாணியில் சொல்லி விடுவேன் என்று அந்த ரசிகருக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
சமீபத்தில் நடைபெற்ற அம்பானி மகன் திருமண விழாவில் நடிகர் ஷாருக்கான், தெலுங்கு நடிகர் ராம்சரணை அழைத்தபோது இட்லி, வடை, சாம்பார் என கூறி அழைத்தார். இப்படி ராம்சரணை ஷாருக்கான் கிண்டலாக குறிப்பிட்டது அப்போது வைரலாகி வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்ருதிஹாசன் இப்படி ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.