இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் அடுத்து தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் அவரது மகளாக நடிக்கப் போகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கமாக வைத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது, தென்னிந்திய பாஷையில் ஏதாவது சொல்லுங்களேன் என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டதை அடுத்து, இப்படி தென்னிந்தியர், வட இந்தியர் என்று கேட்பதே ஒருவிதமான இனவாதம்தான். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதோடு வட இந்தியாவில் உள்ளவர்கள் தென்னிந்தியர்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் என கிண்டலடிப்பது சரியல்ல. காமெடிக்காக கூட அப்படி சொல்லாதீர்கள். அப்படி சொன்னால் மூடிட்டு போடா என்று நான் தென்னிந்திய பாணியில் சொல்லி விடுவேன் என்று அந்த ரசிகருக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
சமீபத்தில் நடைபெற்ற அம்பானி மகன் திருமண விழாவில் நடிகர் ஷாருக்கான், தெலுங்கு நடிகர் ராம்சரணை அழைத்தபோது இட்லி, வடை, சாம்பார் என கூறி அழைத்தார். இப்படி ராம்சரணை ஷாருக்கான் கிண்டலாக குறிப்பிட்டது அப்போது வைரலாகி வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்ருதிஹாசன் இப்படி ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.