தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

2024ம் ஆண்டில் முதன் முதலில் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படம் 'அரண்மனை 4'. சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி, யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் மே மாதம் 3ம் தேதி இப்படம் வெளியானது.
100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக சொல்லப்படும் இப்படம் 50வது நாளைக் கடந்துள்ளது. இந்த வருடத்தில் 25 நாட்களைக் கடந்து சில படங்கள் ஓடியுள்ளன. ஆனால், 50 நாட்களைக் கடந்த ஓடியுள்ள முதல் படம் இதுதான். ஒரு படத்தின் நான்காம் பாகம் வெளிவந்து அது 50 நாட்களைக் கடந்து ஓடுவதும், 100 கோடி வசூலிப்பதும் இதுவே முதல் முறை.
தற்போது ஓடிடியிலும் இப்படம் வெளியாகி உள்ளது. பேய்ப் படம் என்பதால் அங்கும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. விரைவில் 'அரண்மனை 5' படத்தின் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.