ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் |

2024ம் ஆண்டில் முதன் முதலில் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படம் 'அரண்மனை 4'. சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி, யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் மே மாதம் 3ம் தேதி இப்படம் வெளியானது.
100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக சொல்லப்படும் இப்படம் 50வது நாளைக் கடந்துள்ளது. இந்த வருடத்தில் 25 நாட்களைக் கடந்து சில படங்கள் ஓடியுள்ளன. ஆனால், 50 நாட்களைக் கடந்த ஓடியுள்ள முதல் படம் இதுதான். ஒரு படத்தின் நான்காம் பாகம் வெளிவந்து அது 50 நாட்களைக் கடந்து ஓடுவதும், 100 கோடி வசூலிப்பதும் இதுவே முதல் முறை.
தற்போது ஓடிடியிலும் இப்படம் வெளியாகி உள்ளது. பேய்ப் படம் என்பதால் அங்கும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. விரைவில் 'அரண்மனை 5' படத்தின் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.