ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் மற்றும் பலர் நடிப்பில் ஜூன் 18, 2010ல் வெளிவந்த படம் 'ராவண்'. அப்படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆனது குறித்து அபிஷேக் பச்சன் ரசிகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவைக் குறிப்பிட்டு, “மறக்க முடியாத ஒரு நடிப்பு அபிஷேக். உனது மற்ற படங்களில் இருந்து மாறுபட்ட நடிப்பு இந்தப் படத்தில்… அதுதான் ஒரு கலைஞரின் உண்மையான மதிப்பு,” என்று குறிப்பிட்டிருந்தார் அபிஷேக்கின் தந்தையும், நடிகருமான அமிதாப் பச்சன்.
அந்தப் படத்தில் அபிஷேக் ஜோடியாக நடித்தது அமிதாப்பின் மருமகளும், அபிஷேக்கின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய். ஆனால், ஐஸ்வர்யா பற்றி தனது பதிவில் ஒரு வார்த்தையைக் கூட அமிதாப் குறிப்பிடவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவரது கமெண்ட் பகுதியில் ஏன் ஐஸ்வர்யா பற்றி சொல்லவில்லை என்று கேட்டுள்ளனர்.
அபிஷேக், ஐஸ்வர்யா பற்றி அடிக்கடி பிரிவு வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது போன்று அவரைக் குறிப்பிடாமல் அவரது மாமனாரே பதிவிடும் போது அடங்கிய வதந்திகள் மீண்டும் எழுகின்றன.