50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் |

விடுதலை படத்தை அடுத்து சூரி நாயகனாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இவர் இதற்கு முன்பு தனுஷ் நடித்த சீடன் படத்தில் தமிழில் அறிமுகமானார். மேலும் இந்த கருடன் படத்திற்கு பிறகு சில புதிய தமிழ் படங்களில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மலையாளத்தில் மார்கோ என்ற படத்தில் தற்போது ஹீரோவாக நடித்திருக்கிறார் உன்னி முகுந்தன். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் போஸ்டரை கருடன் இயக்குனர் துரை செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த போஸ்டரில் ரத்தம் வழியும் கத்தியை தனது வாயில் கடித்தபடி, ரத்தம் தெறிக்க வெறித்தனமாக நின்று கொண்டிருக்கிறார் உன்னி முகுந்தன்.