ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
விடுதலை படத்தை அடுத்து சூரி நாயகனாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இவர் இதற்கு முன்பு தனுஷ் நடித்த சீடன் படத்தில் தமிழில் அறிமுகமானார். மேலும் இந்த கருடன் படத்திற்கு பிறகு சில புதிய தமிழ் படங்களில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மலையாளத்தில் மார்கோ என்ற படத்தில் தற்போது ஹீரோவாக நடித்திருக்கிறார் உன்னி முகுந்தன். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் போஸ்டரை கருடன் இயக்குனர் துரை செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த போஸ்டரில் ரத்தம் வழியும் கத்தியை தனது வாயில் கடித்தபடி, ரத்தம் தெறிக்க வெறித்தனமாக நின்று கொண்டிருக்கிறார் உன்னி முகுந்தன்.