‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

எதிர்நீச்சல் தொடரில் ஜனனியாக நடித்த மதுமிதாவும், நிவாசினியாக நடித்த வைஷ்ணவி நாயக்கும் உயிர்த்தோழிகள் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே. இருவரும் ஒன்றாக சேர்ந்து பல லூட்டிகள் அடித்து இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்துள்ளனர். தற்போது எதிர்நீச்சல் தொடர் முடிந்துவிட்ட நிலையில் ரீயூனியனில் அனைவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர். அப்போது மதுமிதாவும் வைஷ்ணவியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மதுமிதா தன் இலையில் சாப்பிடாமல் வைத்த பிரியாணி பீஸ்களை வைஷ்ணவியின் இலையில் எடுத்து வைக்கிறார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மதுமிதா அதில் 'உங்கள் உணவுக்கான மனித குப்பைத் தொட்டியை டேக் செய்யுங்கள்' என்று தனது உயிர்த்தோழியையே கலாய்த்துள்ளார். இருந்தாலும் ஜனனிக்கு இவ்வளவு குசும்பு ஆகாது.




