'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
சூப்பர் ஹிட் அடித்து வந்த தொடர் எதிர்நீச்சல். எதிர்பாராத வகையில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து மரணமடைய, வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார். ஆனால், அவரது நடிப்பை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீரியலுக்கு இருந்த வரவேற்பும் குறைந்ததால் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய வேல ராமமூர்த்தி, 'டிஆர்பியில் உச்சத்தில் இருந்த சீரியல் எதிர்நீச்சல் தான். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த சீரியலில் நான் ஏன் நடித்தேன் என்று தான் இப்போது நினைக்கிறேன். மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மிகப்பெரிய அவமானமாகவே நான் இதை பார்க்கிறேன்' என வருத்தத்துடன் பேசியுள்ளார்.