ஹிந்தியில் அறிமுகமாகும் பஹத் பாசில் | ராம், மிரிச்சி சிவா படத்தின் டப்பிங் பணி தொடங்கியது | சீமான், சிவகார்த்திகேயன் சந்திப்பு பின்னனி என்ன? | கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்? | கள்ளக்குறிச்சி சென்ற விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் | அந்த நடிகையின் சாயலில் இருந்ததால்தான் பாலிவுட் பட வாய்ப்பே கிடைத்தது : டாப்ஸி | வில்லன் ரோலை விரும்பும் கமல் | கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும் : விஷால் | கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல் | தனுஷை இயக்கும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா |
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடித்திருக்கும் படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்திற்காக தனது பாடி லாங்குவேஜை மாற்றுவது இல்லாமல் குரலையும் கம்பீரமாக மாற்றி டப்பிங் பேசப் போகிறார்.
மேலும், இந்த அமரன் படம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை ஒட்டி திரைக்கு வருவதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் அதே நாளில் அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால் அமரன் படம் தள்ளிப் போனது. இந்த நிலையில் தற்போது புஷ்பா-2 படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகாது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. அதனால் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.
அதேபோல் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படமும் ஆகஸ்ட் 15ல் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தற்போதைய நிலவரப்படி விக்ரமின் தங்கலானும், சிவகார்த்திகேயனின் அமரன் படமும் ஒரே நாளில் மோதிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.