ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நடந்து முடிந்து ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் பித்தாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். அது மட்டுமல்லாது அவரது கட்சி போட்டியிட்ட 21 சட்டசபைத் தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றது.
பவன் கல்யாணின் இரண்டாவது மனைவி ரேணு தேசாய். இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். தனது மகன் அகிரா, மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார் ரேணு தேசாய். பவன் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரது மகன் அகிரா தனது அப்பாவுடன் டில்லி வரை சென்று பிரதமர் மோடியையும் சந்தித்தார். அது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார் ரேணு.
இந்நிலையில் இன்று(ஜூன் 12) ஆந்திர மந்திரிசபையில் அமைச்சராக (துணை முதல்வர் வாய்ப்பு) பதவியேற்ற பவன் கல்யாணுக்கு ரேணு தேசாய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவுக்கு தனது மகன், மகள் ஆகியோர் அவரது அப்பா பதவியேற்பு விழாவுக்கு ரெடியாகும் போட்டோவைப் பதிவிட்டு, பவனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.