ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நடந்து முடிந்து ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் பித்தாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். அது மட்டுமல்லாது அவரது கட்சி போட்டியிட்ட 21 சட்டசபைத் தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றது.
பவன் கல்யாணின் இரண்டாவது மனைவி ரேணு தேசாய். இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். தனது மகன் அகிரா, மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார் ரேணு தேசாய். பவன் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரது மகன் அகிரா தனது அப்பாவுடன் டில்லி வரை சென்று பிரதமர் மோடியையும் சந்தித்தார். அது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார் ரேணு.
இந்நிலையில் இன்று(ஜூன் 12) ஆந்திர மந்திரிசபையில் அமைச்சராக (துணை முதல்வர் வாய்ப்பு) பதவியேற்ற பவன் கல்யாணுக்கு ரேணு தேசாய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவுக்கு தனது மகன், மகள் ஆகியோர் அவரது அப்பா பதவியேற்பு விழாவுக்கு ரெடியாகும் போட்டோவைப் பதிவிட்டு, பவனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.