‛காட் பிளஸ் யூ மாமே...' : ‛குட் பேட் அக்லி' இரண்டாவது போஸ்டர் வெளியீடு | மீண்டும் அனிமல் பட இயக்குனர் உடன் இணையும் ராஷ்மிகா | சூர்யா நடிக்க இருந்த 'கர்ணா' டிராப்பா ? | தாமதமாகும் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் : இயக்குனர் ஷங்கர் பதில் | கமல் Vs ரஜினி, விஜய் Vs அஜித் : ஏட்டிக்குப் போட்டியாக அப்டேட்டுகள் | வருகிற கிறிஸ்துமஸ்க்கு திரைக்கு வரும் பேபி ஜான் | உலகில் யாராலும் இப்படி நடிக்க முடியாது : கமல் குறித்து ஷங்கர் பெருமிதம் | சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு உதவிய கே.பி.ஒய்.பாலா, ஐஸ்வர்யா ராஜேஷ் | மீண்டும் அரசியலுக்கு வருகிறார் சிரஞ்சீவி? | கோட் படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நிறுவனம் |
திருவனந்தபுரம் : மத்திய அமைச்சராக நேற்று (ஜூன் 9) பொறுப்பேற்ற நடிகர் சுரேஷ் கோபி, இன்று திரைப்படங்களில் நடிக்க இருப்பதால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் எனத் தெரிவித்ததாக செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள சுரேஷ் கோபி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது பெருமை எனவும் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் சுரேஷ் கோபி. பா.ஜ., கட்சியில் உள்ள இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம், திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு கேரளாவில் பா.ஜ.வின் முதல் லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வானார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சர்கள் 71 பேர் பதவியேற்றனர். இதில் சுரேஷ் கோபியும் அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆனால், 'திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதால் எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம். என்னை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன்' என்று சுரேஷ் கோபி தெரிவித்ததாக செய்தி பரவியது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த சுரேஷ்கோபி, அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாவது : மோடி அரசின் அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. மோடி அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதும், கேரள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் எனக்கு பெருமை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கேரளாவின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதி பூண்டுள்ளேன் என விளக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.