விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

திருவனந்தபுரம் : மத்திய அமைச்சராக  நேற்று (ஜூன் 9) பொறுப்பேற்ற நடிகர் சுரேஷ் கோபி, இன்று திரைப்படங்களில் நடிக்க இருப்பதால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் எனத் தெரிவித்ததாக செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள சுரேஷ் கோபி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது பெருமை எனவும் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் பிரபல நடிகர் சுரேஷ் கோபி.  பா.ஜ., கட்சியில் உள்ள இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம், திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு கேரளாவில் பா.ஜ.வின் முதல் லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வானார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சர்கள் 71 பேர் பதவியேற்றனர். இதில் சுரேஷ் கோபியும் அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆனால், 'திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதால் எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம். என்னை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன்' என்று சுரேஷ் கோபி தெரிவித்ததாக செய்தி பரவியது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த சுரேஷ்கோபி, அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாவது : மோடி அரசின் அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. மோடி அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதும், கேரள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் எனக்கு பெருமை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கேரளாவின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதி பூண்டுள்ளேன் என விளக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            