பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அதிநவீன கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சி கூடம், நடிப்பு பயிற்சி மையம் போன்றவை கட்டப்பட உள்ளன. கட்டிட பணிகள் 60 சதவீதம் முடிந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான, மற்றும் சங்கத்தின் இடம் தொடர்பான வழக்குகளால் தாமதம் ஏற்பட்டது. பின்னர் நாசர் தலைமையில் நிர்வாகிகள் பொறுப்பு ஏற்ற பிறகு வங்கியில் கடன் பெற்று மீண்டும் கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
கட்டிட நிதியாக கமல்ஹாசன், விஜய், தனுஷ், நெப்போலியன், உதயநிதி ஆகியோர் தலா ஒரு கோடி நிதி வழங்கி உள்ளனர். சிவகார்த்திகேயன் 50 லட்சம் வழங்கினார். நடிகர் சங்க கட்டிடம் ஆரம்பிக்கப்பட்டபோது போடப்பட்ட திட்ட மதிப்பீட்டை விட இப்போது பல மடங்கு செலவினங்கள் பெருகி விட்டதால் வெறும் வங்கி கடன், நன்கொடைகளை வைத்து மட்டும் கட்டித்தை முடிக்க முடியாது என்பதால் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடத்தி நிதி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதன் பிறகு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல நாடுகளிலும் நடத்தப்பட இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன், ரஜினியை நேற்று நேரில் சந்தித்து நடிகர் சங்க செயல்பாடுகள் மற்றும் கட்டிட பணிகள் குறித்து பேசினார். அதோடு நட்சத்திர கலை விழா குறித்த ஏற்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் பேசினார். நடிகர் சங்கத்தின் அனைத்து ஏற்பாடுகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக ரஜினியும் உத்தரவாதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.