சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அதிநவீன கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சி கூடம், நடிப்பு பயிற்சி மையம் போன்றவை கட்டப்பட உள்ளன. கட்டிட பணிகள் 60 சதவீதம் முடிந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான, மற்றும் சங்கத்தின் இடம் தொடர்பான வழக்குகளால் தாமதம் ஏற்பட்டது. பின்னர் நாசர் தலைமையில் நிர்வாகிகள் பொறுப்பு ஏற்ற பிறகு வங்கியில் கடன் பெற்று மீண்டும் கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
கட்டிட நிதியாக கமல்ஹாசன், விஜய், தனுஷ், நெப்போலியன், உதயநிதி ஆகியோர் தலா ஒரு கோடி நிதி வழங்கி உள்ளனர். சிவகார்த்திகேயன் 50 லட்சம் வழங்கினார். நடிகர் சங்க கட்டிடம் ஆரம்பிக்கப்பட்டபோது போடப்பட்ட திட்ட மதிப்பீட்டை விட இப்போது பல மடங்கு செலவினங்கள் பெருகி விட்டதால் வெறும் வங்கி கடன், நன்கொடைகளை வைத்து மட்டும் கட்டித்தை முடிக்க முடியாது என்பதால் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடத்தி நிதி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதன் பிறகு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல நாடுகளிலும் நடத்தப்பட இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன், ரஜினியை நேற்று நேரில் சந்தித்து நடிகர் சங்க செயல்பாடுகள் மற்றும் கட்டிட பணிகள் குறித்து பேசினார். அதோடு நட்சத்திர கலை விழா குறித்த ஏற்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் பேசினார். நடிகர் சங்கத்தின் அனைத்து ஏற்பாடுகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக ரஜினியும் உத்தரவாதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.