ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பெங்களூரு அருகே ஒரு பண்ணை வீட்டில் நடந்த போதை விருந்தில் வெளிநாட்டு போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வந்தது. போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 100க்கும் மேற்பட்டவர்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டதும், தெலுங்கு நடிகர், நடிகைகள் கலந்து கொண்டதும் தெரிய வந்தது.
இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்ததே தெலுங்கு நடிகை ஹேமா என்ற தகவல் வெளியானது. இவர் 250க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், தமிழில் ஈரமான ரோஜாவே, அழகிய தமிழ் மகன், சத்யம், சாகசம், தேவி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஹேமாவும் விருந்தில் பங்கேற்று போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து ஹேமா நீக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்க தலைவர் மனோஜ் மஞ்சு கூறுகையில், “ஹேமா போதை பொருள் எடுத்துக் கொண்டது உறுதியானதால், அவரை நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிமாக நீக்கி உள்ளோம். ஒருவேளை அவர் நிரபராதி என்று தெரிய வந்தால் அதன்பிறகு அவரை நீக்கிய முடிவை ரத்து செய்வது குறித்து யோசிப்போம். வழக்கு சம்பந்தமான விவரங்களை கொடுக்கும்படி ஹேமாவிடம் கோரியபோதும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை” என்றார்.