தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் |
பெங்களூரு அருகே ஒரு பண்ணை வீட்டில் நடந்த போதை விருந்தில் வெளிநாட்டு போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வந்தது. போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 100க்கும் மேற்பட்டவர்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டதும், தெலுங்கு நடிகர், நடிகைகள் கலந்து கொண்டதும் தெரிய வந்தது.
இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்ததே தெலுங்கு நடிகை ஹேமா என்ற தகவல் வெளியானது. இவர் 250க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், தமிழில் ஈரமான ரோஜாவே, அழகிய தமிழ் மகன், சத்யம், சாகசம், தேவி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஹேமாவும் விருந்தில் பங்கேற்று போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து ஹேமா நீக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்க தலைவர் மனோஜ் மஞ்சு கூறுகையில், “ஹேமா போதை பொருள் எடுத்துக் கொண்டது உறுதியானதால், அவரை நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிமாக நீக்கி உள்ளோம். ஒருவேளை அவர் நிரபராதி என்று தெரிய வந்தால் அதன்பிறகு அவரை நீக்கிய முடிவை ரத்து செய்வது குறித்து யோசிப்போம். வழக்கு சம்பந்தமான விவரங்களை கொடுக்கும்படி ஹேமாவிடம் கோரியபோதும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை” என்றார்.