2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

'கேங்ஸ் ஆப் கோதாவரி' என்ற படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாயகன் விஷ்வன் சென், நாயகிகள் நேகா ஷெட்டி, அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசிய ஒன்றை நடிகை அஞ்சலி சரியாக கவனிக்கவில்லை. அதனால், அவர் ஆத்திரத்தில் அஞ்சலியை லேசாகத் தள்ளிவிட்டார். இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடியே இருந்தார் அஞ்சலி.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் பாலகிருஷ்ணாவின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சையை பெரிதுபடுத்த விரும்பாத அஞ்சலி அவரது எக்ஸ் தளத்தில் சமாளிப்பு பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“கேங்ஸ் ஆப் கோதாவரி' படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணாவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலகிருஷ்ணா சாரும் நானும் ஒருவரையொருவர் எப்போதும் பரஸ்பர மரியாதையுடன் இருந்து வருகிறோம் என்பதையும், நீண்ட காலமாக நட்பாக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் அவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது சிறப்பானது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் அவரது பதிவின் கமெண்ட் பக்கத்தை லாக் செய்துள்ளார்.