மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

'கேங்ஸ் ஆப் கோதாவரி' என்ற படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாயகன் விஷ்வன் சென், நாயகிகள் நேகா ஷெட்டி, அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசிய ஒன்றை நடிகை அஞ்சலி சரியாக கவனிக்கவில்லை. அதனால், அவர் ஆத்திரத்தில் அஞ்சலியை லேசாகத் தள்ளிவிட்டார். இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடியே இருந்தார் அஞ்சலி.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் பாலகிருஷ்ணாவின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சையை பெரிதுபடுத்த விரும்பாத அஞ்சலி அவரது எக்ஸ் தளத்தில் சமாளிப்பு பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“கேங்ஸ் ஆப் கோதாவரி' படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணாவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலகிருஷ்ணா சாரும் நானும் ஒருவரையொருவர் எப்போதும் பரஸ்பர மரியாதையுடன் இருந்து வருகிறோம் என்பதையும், நீண்ட காலமாக நட்பாக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் அவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது சிறப்பானது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் அவரது பதிவின் கமெண்ட் பக்கத்தை லாக் செய்துள்ளார்.




