தீபாவளியை குறிவைக்கும் தக் லைப் படக்குழு | ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படத்தின் புதிய அப்டேட் | பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி? | 2050ல் நடக்கும் கதையா 'தி கோட்'? | 50வது நாளில் 'அரண்மனை 4' | விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன இபிஎஸ், கமல் | நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் அலட்சியம் : சாகசம் என்ற பெயரில் சிறுவன் கையில் தீ பற்றியதால் அதிர்ச்சி | விஜய் 69 - தெலுங்கு தயாரிப்பாளர் தான் என்பது உறுதி | ராம்சரணின் புதிய படம் குறித்து அப்டேட் தகவல்களை கொடுத்த விஜய்சேதுபதி | ஆஷிகாவை பெண்களே காதலிப்பார்கள் : இயக்குனர் கணிப்பு |
'கேங்ஸ் ஆப் கோதாவரி' என்ற படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாயகன் விஷ்வன் சென், நாயகிகள் நேகா ஷெட்டி, அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசிய ஒன்றை நடிகை அஞ்சலி சரியாக கவனிக்கவில்லை. அதனால், அவர் ஆத்திரத்தில் அஞ்சலியை லேசாகத் தள்ளிவிட்டார். இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடியே இருந்தார் அஞ்சலி.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் பாலகிருஷ்ணாவின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சையை பெரிதுபடுத்த விரும்பாத அஞ்சலி அவரது எக்ஸ் தளத்தில் சமாளிப்பு பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“கேங்ஸ் ஆப் கோதாவரி' படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணாவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலகிருஷ்ணா சாரும் நானும் ஒருவரையொருவர் எப்போதும் பரஸ்பர மரியாதையுடன் இருந்து வருகிறோம் என்பதையும், நீண்ட காலமாக நட்பாக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் அவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது சிறப்பானது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் அவரது பதிவின் கமெண்ட் பக்கத்தை லாக் செய்துள்ளார்.