யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் | நாகசைதன்யா - சோபிதா குறித்து அவதூறு : மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்ட ஜோதிடர் | இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத் | ஜன., 26ல் விஜய் 69 முதல் பார்வை வெளியாக வாய்ப்பு | ஹனிரோஸ் புகாரில் சிறை சென்ற செல்வந்தருக்கு உதவி செய்த ஜெயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் | தனது அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயிலர் வில்லன் |
நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் ஜுன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இப்படத்திற்கான வியாபாரம் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கு மாநிலங்களின் வியாபாரம் முடிந்துவிட்டதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இப்படத்தின் வினியோக உரிமை சுமார் 150 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். பிரபாஸ் நடித்த படங்களிலேயே இதுதான் அதிகத் தொகை என்கிறார்கள்.
பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அவரது படங்கள் அந்த அளவிற்கு வசூலைக் குவிக்கவில்லை. ஆனால், 'கல்கி 2898 ஏடி' படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.