20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இந்த படத்தில் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், சமீபத்தில் புதுச்சேரியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கே பழைய கோட்டை சாலையிலும் கடற்கரை சாலையிலும் இந்த படத்தில் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிகளில் கார்கள் பறந்து வெடித்து சிதறுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டன. இரவு நேரம் என்பதால் படப்பிடிப்பு நடப்பது பற்றி அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் இந்த சத்தம் கேட்டு பதறியடித்து வெளியே வந்து பார்த்தனர்.
கோட் படத்தின் படப்பிடிப்பு நடப்பதை அப்போதுதான் தெரிந்துகொண்ட அவர்கள் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்துமாறு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் படக்குழுவினர் அவர்களிடம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றும் இதனால் எந்த விதமான அபாயமும் யாருக்கும் ஏற்படாது என்றும் உறுதி அளித்து அவர்களை சமாதானப்படுத்தி, பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினார்களாம்.