ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இந்த படத்தில் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், சமீபத்தில் புதுச்சேரியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கே பழைய கோட்டை சாலையிலும் கடற்கரை சாலையிலும் இந்த படத்தில் முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சிகளில் கார்கள் பறந்து வெடித்து சிதறுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டன. இரவு நேரம் என்பதால் படப்பிடிப்பு நடப்பது பற்றி அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் இந்த சத்தம் கேட்டு பதறியடித்து வெளியே வந்து பார்த்தனர்.
கோட் படத்தின் படப்பிடிப்பு நடப்பதை அப்போதுதான் தெரிந்துகொண்ட அவர்கள் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்துமாறு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் படக்குழுவினர் அவர்களிடம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றும் இதனால் எந்த விதமான அபாயமும் யாருக்கும் ஏற்படாது என்றும் உறுதி அளித்து அவர்களை சமாதானப்படுத்தி, பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினார்களாம்.




