20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் முடிந்த சில நாட்களிலேயே அபுதாபி சென்றார். அங்கு ஐயக்கிய அமீரக அரசு அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. தொடர்ந்து பிரதமர் மோடி திறந்து வைத்த சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இரண்டு வார ஓய்விற்குப் பிறகு நேற்று சென்னை திரும்பினார்.
அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் நடிக்க போகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்க உள்ளது. அதற்குள் இமயமலை சென்று திரும்ப எண்ணிய ரஜினி இன்று(மே 29) இமயமலை புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛இந்தியா மட்டுமல்ல, உகத்திற்கே ஆன்மிகம் தேவை. ஆன்மிகம் என்றால் சாந்தியும் சமாதானமும்'' என்றார். தொடர்ந்து அவரிடம் ‛இசையா, கவிதையா' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‛நோ கமென்ட்ஸ்' என்றார். மேலும் அவரிடத்தில் ‛பிரதமர் மோடி மீண்டும் வெல்வாரா' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு, ‛‛மன்னிக்கவும், அரசியல் பற்றி எதுவும் கேட்காதீங்க'' என தெரிவித்தார்.