மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் முடிந்த சில நாட்களிலேயே அபுதாபி சென்றார். அங்கு ஐயக்கிய அமீரக அரசு அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. தொடர்ந்து பிரதமர் மோடி திறந்து வைத்த சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இரண்டு வார ஓய்விற்குப் பிறகு நேற்று சென்னை திரும்பினார்.
அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் நடிக்க போகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்க உள்ளது. அதற்குள் இமயமலை சென்று திரும்ப எண்ணிய ரஜினி இன்று(மே 29) இமயமலை புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛இந்தியா மட்டுமல்ல, உகத்திற்கே ஆன்மிகம் தேவை. ஆன்மிகம் என்றால் சாந்தியும் சமாதானமும்'' என்றார். தொடர்ந்து அவரிடம் ‛இசையா, கவிதையா' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‛நோ கமென்ட்ஸ்' என்றார். மேலும் அவரிடத்தில் ‛பிரதமர் மோடி மீண்டும் வெல்வாரா' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு, ‛‛மன்னிக்கவும், அரசியல் பற்றி எதுவும் கேட்காதீங்க'' என தெரிவித்தார்.