‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த பார்வதி நாயர் 'என்னை அறிந்தால்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், சீதக்காதி படங்களில் நடித்தார். தற்போது, ஆலம்பனா, ரூபம் மற்றும் விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் குறைவாக நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்களை வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அவர் எந்த பதிவையும் வெளியிடவில்லை. ரசிகர்களின் கமெண்டுகளுக்கும் பதில் அளிக்கவில்லை. ரசிகர்களும் அவருக்கு என்னாச்சு என்கிற ரீதியில் பல யூகங்களை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தனது படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். நீங்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும் அன்போடுகூடிய மெசேஜ்களுக்கும் நன்றி'' என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.
புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் துபாயில் உள்ள தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.