20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த பார்வதி நாயர் 'என்னை அறிந்தால்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், சீதக்காதி படங்களில் நடித்தார். தற்போது, ஆலம்பனா, ரூபம் மற்றும் விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் குறைவாக நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்களை வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அவர் எந்த பதிவையும் வெளியிடவில்லை. ரசிகர்களின் கமெண்டுகளுக்கும் பதில் அளிக்கவில்லை. ரசிகர்களும் அவருக்கு என்னாச்சு என்கிற ரீதியில் பல யூகங்களை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தனது படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். நீங்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும் அன்போடுகூடிய மெசேஜ்களுக்கும் நன்றி'' என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.
புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் துபாயில் உள்ள தனது குடும்பத்தினருடன் அவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.