முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் | 20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் |
கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ள ‛பி.டி சார்' என்ற படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து பல ஊர்களுக்கும் சென்று அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கோவையில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹிப்ஹாப் ஆதி, மீடியாக்களை சந்தித்தார்.
அப்போது, ‛‛இந்த படம் காமெடியாக இருந்தாலும் சீரியஸான விஷயத்தையும் வைத்திருக்கிறார் இயக்குனர். இப்படி கதை வலுவாக இருப்பதால் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்றெல்லாம் பார்க்காமல் இந்த படத்தையும் மக்கள் வெற்றி படமாக்குவார்கள்'' என்று கூறினர். அவரிடம், ஓடிடியில் படங்கள் வெளியாவது குறித்து கேட்ட கேள்விக்கு, ‛‛ஓடிடி என்பது படங்களுக்கு பெரிய ரீச்சை கொடுக்கிறது. இதனால் படம் திரையரங்குகளுக்கு வந்து ஓடி முடித்த பிறகும் பெரும்பாலானோர் ஓடிடியில் பார்த்து ரசிக்கிறார்கள்.
அதே சமயம் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கக்கூடிய இளைஞர்கள் கூட அடுத்தபடியாக ஓடிடியில் படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தியேட்டருக்கு வருவதையும் தவிர்க்கிறார்கள். இதனால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கக் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கருதுகிறேன். ஆனபோதிலும் இது சரியா தவறா என்பதை இப்போதே என்னால் கூற முடியாது. இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு தான் நிலைமை என்னவாகும் என்று கூறமுடியும் என்று பதில் அளித்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.