ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாபிர், ஸ்ரீநாத் பாசி மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளிவந்த படம் 'மஞ்சம்மேல் பாய்ஸ்'. இப்படம் சுமார் 250 கோடியை வசூலித்து சாதனை புரிந்தது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த 'குணா' படத்தில் வந்த குகையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில் இடம் பெற்றிருந்த 'குணா' படப் பாடலான 'கண்மணி அன்போடு….' பாடல் படத்துடன் ஒன்றி, உருக வைத்து படத்தைப் பார்க்க பெரும் காரணமாக அமைந்தது.
இளையராஜா இசையில் வெளிவந்த அப்பாடல்தான் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தின் வெற்றிக்கும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும். ஆனால், அப்பாடலைப் பயன்படுத்த இளையராஜாவிடம் அனுமதி பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
எந்த ஒரு பாடலைப் பயன்படுத்த வேண்டுமென்றாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையான அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும். ஆனால், 'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழு அனுமதி பெறாததால் இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
'மஞ்சம்மேல் பாய்ஸ்' படக்குழுவினர் 'குணா' நடிகர் கமல்ஹாசனை மட்டும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதே சமயம் அவர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்திக்கவேயில்லை. அதன் காரணம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. பாடலுக்கு முறையான அனுமதி வாங்கியிருந்தால் அவர்கள் இளையராஜாவை சந்திப்பத்தில் எந்த சிக்கலும் இருந்திருக்காதே ?. அதனால்தான் அவரை சந்திப்பதைத் தவிர்த்தார்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.