பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

இசையமைப்பாளர் இளையராஜாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் நேற்று சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், தமிழர்களின் பெருமை இசைஞானி இளையராஜாவை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையால், பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்னும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அந்த பாடலில் சகோதரி பவதாரணியின் இசை பங்களிப்பு குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். எங்களை அன்போடு வரவேற்று இசையோடு அவர் வழி அனுப்பி வைத்தார் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அதோடு, மறைந்த பவதாரணியின் இசையில் உருவான பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்ற பாடலையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த பாடல் பவதாரணி இசையில், சுகிர் தாரணி பாடல் வரிகளில் உருவாகி இருக்கிறது.