கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
இசையமைப்பாளர் இளையராஜாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் நேற்று சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், தமிழர்களின் பெருமை இசைஞானி இளையராஜாவை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையால், பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்னும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அந்த பாடலில் சகோதரி பவதாரணியின் இசை பங்களிப்பு குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். எங்களை அன்போடு வரவேற்று இசையோடு அவர் வழி அனுப்பி வைத்தார் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அதோடு, மறைந்த பவதாரணியின் இசையில் உருவான பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்ற பாடலையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த பாடல் பவதாரணி இசையில், சுகிர் தாரணி பாடல் வரிகளில் உருவாகி இருக்கிறது.