சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

இசையமைப்பாளர் இளையராஜாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் நேற்று சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், தமிழர்களின் பெருமை இசைஞானி இளையராஜாவை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையால், பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்னும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அந்த பாடலில் சகோதரி பவதாரணியின் இசை பங்களிப்பு குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். எங்களை அன்போடு வரவேற்று இசையோடு அவர் வழி அனுப்பி வைத்தார் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அதோடு, மறைந்த பவதாரணியின் இசையில் உருவான பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்ற பாடலையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த பாடல் பவதாரணி இசையில், சுகிர் தாரணி பாடல் வரிகளில் உருவாகி இருக்கிறது.




