Advertisement

சிறப்புச்செய்திகள்

'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை

17 மே, 2024 - 04:25 IST
எழுத்தின் அளவு:
Home-security-for-actor-Surya:-Offer-free-of-charge-on-ministers-recommendation

ஆளுங்கட்சி அரசியல் வாரிசின் ஆசியுடன், இலவசமாக இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா நடிப்பில், 2021ல், ஜெய்பீம் திரைப்படம் வெளியானது. ஜாதி வெறியை துாண்டும் விதமாக காட்சிகள் உள்ளதாக கூறி, படத்தின் இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது, சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில், பா.ம.க., நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

நான்கு போலீசார்


இதன் காரணமாக, சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நாளடைவில் அப்பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பு மட்டும் விலக்கிக் கொள்ளப்படாமல் இன்று வரை தொடர்கிறது.

சூர்யா வீடு முன், ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த நான்கு போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யா குடும்பத்துடன் மும்பையில் தங்கியிருந்த போதும், அவரது சென்னை வீட்டுக்கு அரசு செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவது ஏன் என, பல தரப்பிலும் கேள்வி எழுப்பப்படுகிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், 'நடிகர் வீட்டுக்கு யாருடைய உத்தரவுபடி, எந்த தேதியிலிருந்து ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்' என்று கேட்டிருந்தார்.

அதற்கு, 'போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி, 2021 நவ., 15 முதல் தற்காலிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு மறு ஆய்வு குழு தீர்மானத்தின்படி, பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது' என, பதில் கிடைத்தது.

மும்பையில்...

அதேநேரத்தில், 'பாதுகாப்பு அளிக்க, சூர்யா ஏதாவது பணம் செலுத்துகிறாரா' என்ற கேள்விக்கு, 'இல்லை' என்றும் பதில் அளித்துள்ளனர்.

பொது இடங்களில் நிகழ்ச்சி நடந்தால், அதற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் முதல் அதிகாரிகள் வரை, ஒவ்வொரு பதவிக்கு ஏற்ப பணம் வசூலிக்கப்படும். பணம் வசூலித்த பின்னரே, சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்குவர். அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் போது, சம்பந்தப்பட்ட நபர் காவல் துறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இரண்டரை ஆண்டுகளாக, நடிகர் சூர்யா ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் இருப்பதுடன், அரசு செலவில் அவரின் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருவது எந்த விதத்தில் நியாயம் என, சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், தற்போது சூர்யா தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இருந்தும், சென்னையில் உள்ள வீட்டிற்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வர காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அமைச்சர் ஒருவரின் பரிந்துரைப்படி, பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்

- நமது நிருபர் -.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்இளையராஜாவை சந்தித்த அமைச்சர் ... மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in