அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா 2 வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புஷ்பா படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபனும் ஒருவர். இந்த நிலையில் இந்த இறுதி கட்டத்தில் புஷ்பா 2வில் இருந்து ஆண்டனி ரூபன் தற்போது விலகி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி எடிட்டர்களில் ஒருவராக பல படங்களுக்கு பட தொகுப்பு செய்து வரும் ஆண்டனி ரூபன் ஏற்கனவே இங்கே ஒப்புக்கொண்ட படங்களில் பிசியாக பணியாற்றி வருவதால் புஷ்பா 2 படத்திற்கு தன்னால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை என்று கூறி இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயத்தை வெளியே பகிரங்கப்படுத்த விரும்பாத புஷ்பா 2 படக்குழு அவருக்கு பதிலாக குண்டூர் காரம். வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய நவீன் நூலியை வைத்து புஷ்பா 2 படத்தின் பணிகளை தொடர இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.