50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 | அஜித்துக்கு பத்மபூஷண்…. வாழ்த்துவதில் ஏன் பாரபட்சம்…. | பிளாஷ்பேக்: சாதுர்யமிக்க இயக்கத்தால் சாதனை படைத்த “சாந்த சக்குபாய்” | விஜய்யின் கடைசி படம் ‛ஜனநாயகன்': பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | ‛‛நீங்க எல்லாரும் இல்லாம விருது கிடைத்திருக்காது'': பத்ம பூஷன் விருது பெற்றி ஷோபனா நெகிழ்ச்சி | ‛மஜா' பட இயக்குனர் ஷபி மறைவு |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமலு மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தமிழகத்தில் உள்ள பல பிரபலங்களும் இந்த படங்களுக்கான பாராட்டுகளை மனம் திறந்து தெரிவித்தனர். கமல், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியதும் நடந்தது. இதில் பிரேமலு படத்தை இயக்குனர் கிரிஷ் ஏடி என்பவர் இயக்கியிருந்தார். அழகான காதல் கதையை நகைச்சுவை கலந்து இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் விதமாக கொடுத்திருந்தார்.
அதனால் மலையாளத்தை தாண்டி தெலுங்கு மற்றும் தமிழிலும் இந்த படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தனது ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்குமாறு பிரேமலு இயக்குனரிடம் கமல் கேட்டுக் கொண்டதாகவும், அதை அவர் மறுத்து விட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது பிரேமலு படத்தை தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு தான் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறி இந்த வாய்ப்பை அவர் நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.