சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமலு மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தமிழகத்தில் உள்ள பல பிரபலங்களும் இந்த படங்களுக்கான பாராட்டுகளை மனம் திறந்து தெரிவித்தனர். கமல், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியதும் நடந்தது. இதில் பிரேமலு படத்தை இயக்குனர் கிரிஷ் ஏடி என்பவர் இயக்கியிருந்தார். அழகான காதல் கதையை நகைச்சுவை கலந்து இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் விதமாக கொடுத்திருந்தார்.
அதனால் மலையாளத்தை தாண்டி தெலுங்கு மற்றும் தமிழிலும் இந்த படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தனது ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்குமாறு பிரேமலு இயக்குனரிடம் கமல் கேட்டுக் கொண்டதாகவும், அதை அவர் மறுத்து விட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது பிரேமலு படத்தை தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு தான் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறி இந்த வாய்ப்பை அவர் நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.