நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய படைப்பாக உருவாகி வருகிறது கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கி வரும் இந்த படத்தில் தமிழில் இருந்து கமல்ஹாசன், பாலிவுட்டிலிருந்து அமிதாப்பச்சன் என சீனியர் ஜாம்பவான் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிக்சனுடன் கூடிய வரலாற்று படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். வரும் ஜூன் 27ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரங்களும் துவங்கி விட்டன. அந்த வகையில் இந்த படத்தின் கன்னட வெளியீட்டு உரிமையை பிரபல கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம்தான் தற்போது தேசிய விருது இயக்குனரும் நடிகையுமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்து வரும் டாக்ஸிக் என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.