தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பாகங்களான வெளியான பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வரலாற்றுப் படங்கள் மீதான ரசிகர்களின் ஆவலை தூண்டி, இன்று பல வரலாற்று படங்கள் உருவாவதற்கு அடித்தளமிட்ட படம் பாகுபலி என்றால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த நிலையில் பாகுபலி படம் அப்படியே 'பாகுபலி : கிரவுண்ட் ஆப் தி பிளட்' என்கிற பெயரில் அனிமேஷன் சீரிஸ் ஆக வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இந்த அனிமேஷன் சீரிஸில் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை பார்க்கும்போது பலரும் அது நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி சாயலிலேயே இருப்பதாக கருதினார்கள். இதுகுறித்து இயக்குனர் ராஜமவுலியிடமே கேட்கப்பட்டது. அவரும் கூட பாகுபலி தோனி சாயலில் தான் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டதுடன், ஒருவேளை இதை உருவாக்கியவர்கள் தோனியின் ரசிகர்களாக இருந்திருப்பார்கள் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.