போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மாஜி ஹீரோயினிகளில் சரண்யா போன்றோர் அம்மா வேடங்களில் நடித்துக்கொண்டிருக்க, ஊர்வசியோ பேச்சியக்கா மருமகன் என்ற படத்தில் மாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இதுவும் இன்னொரு அம்மா வேடம் போன்றுதானாம். ஆனால் பக்கா கிராமத்து வேடமாம். தனது முதல் படமான முந்தானை முடிச்சு படத்திலேயே கிராமத்து பெண்ணாகத்தான் நடித்தார் ஊர்வசி. அந்த வகையில் இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் படத்திலும் தனக்கு கிராமத்து வேடம் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் நடித்தாராம் ஊர்வசி.
மேலும், கிராமத்து வயதான பெண்களைப்போன்று புடவை, உடுத்திக்கொண்டு நடித்த ஊர்வசி, டப்பிங்கைகூட அங்குள்ள பெண்கள் பேசுவதுபோன்றே பேசினாராம். அதனால் எனது நடிப்பைப்போலவே இப்படத்தில் டப்பிங்கும் பக்காவாக இருக்கும் என்று சொல்லும் ஊர்வசி, இப்படத்திற்கு டப்பிங் பேசியபோது, எனது நடிப்பைப்பார்த்து நானே மனம் நெகிழ்ந்து போனேன். அதோடு, இனி இந்த மாதிரி மனதை தொடும் கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் ஊர்வசி.